Wednesday, May 12, 2010

சொற்கப்பல் விமர்சன தள கூட்டம் அமர்வு இரண்டு - கற்றதும் பெற்றதும்



நாம் யாராவது கடிதங்களை போடும்,வாசிக்கும் வழக்கம் வழக்கு ஒழிந்து போகும் நிலைக்கு நாம் தள்ளபட்டு கொண்டு இருக்கிறோம்.

சொற்கப்பல் விமர்சன தளம் ஆரம்பிக்கபட்டு அதன் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி இந்த நேரத்தில் இதை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கும்

பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
அஜயன்பாலா
முகுந்த் (தடாகம்.காம்)
வேடியப்பன்(டிஸ்கவரி புக் ஹவுஸ்)
ஆகிய அனைவருக்கும் என்றும் நன்றி தெறிவிக்க கடைமைபட்டுள்ளோம். நிகழ்ச்யில் திரை பாடல் ஆசிரியர் நா.முத்துகுமார் காஞ்சிபுரம் வெ.நாராயணன் பறிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
கூத்துபட்டரை நா.முத்துசாமி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நாற்பது வருடங்களுக்கு மேலான அனுபவத்தை ஓன்றரை மணிநேரத்தில் முடித்து கொண்டார் இருந்தும் அவர்

கூத்தபட்டரை பயிற்ச்சி அனுபவங்களை வெளிநாட்டு நாடக அனுபவங்கள் நேரமின்மை காரணமாக அவர் பேச முடியவில்லை மேலும் புத்தக விமர்சனங்கள் (திறனாய்வுகள்) நரன் தவிர மற்ற அனைவரும் கட்டுரையாக வாசித்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது
அவணபடுத்த கட்டுரையாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் போது உரைநடையில் பகிர்ந்து கொண்டால் கேட்பவருக்கு அண்ணியபடாமல் இருக்கும்.
மேலும் டிஸ்கவரி புக் ஹவுஸ் புத்தக கடையில் வெளிகாற்று உள்ளே வர வழி இல்லாததால் பேசியவர்,கேட்பவர்களுக்கு அசொகரியமாக இருந்து சிலர் வாசலின் அருகில் இருந்து பேச்சை கேட்டார்கள் சிலர் புத்தகங்களை சுற்றி பார்த்து கொண்டு கேட்டார்கள் சிலர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பக்கத்தில் இருக்கும் புத்தகங்களை கையில் வைத்து கொண்டு கேட்டார்கள்.
இதையெல்லாம் தவிர்க்க வலைபதிவர் சந்திப்பு நடக்கும் இரண்டாவது தளத்தில் இதை நடத்தினால்
இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்

நன்றி : கற்றதும் பெற்றதும்

No comments:

Post a Comment